NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு
    வடமேற்கு மாநிலங்களில் இருக்கும் அதிக புலிகள், காப்பகங்களுக்கு வெளியே உள்ளன.

    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.

    இது மகிழ்ச்சிகரமான செய்தி என்றாலும், பல பெரிய மாநிலங்களில் புலிகளின் இருப்பிட எண்ணிக்கை குறைந்து வருவது கவலையை எழுப்பியுள்ளது.

    சமீபத்திய மதிப்பீட்டில் மொத்தம் 3,080 புலிகளின்(1 வயதுக்கு மேற்பட்டவை) படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகளின் புகைப்படங்களை ஒப்பிடும் போது, தற்போது உள்ள புலிகள் பெரிதாக இருக்கின்றன.

    "புலிகளை காக்கும் 13 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், இந்தியா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது." என்று அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் 5வது வெளியீட்டை வெளியிட்ட பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இந்தியா

    மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 824 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது

    பகுப்பாய்விற்காக 174 தளங்களில் 32,588 இடங்களில் கேமரா வைக்கப்பட்டு புலிகளின் படங்கள் எடுக்கப்பட்டன.

    செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தி 47 மில்லியனுக்கும் அதிகமான கேமரா படங்கள் பிரிக்கப்பட்டன. அந்த செயற்கை நுண்ணறிவு 3,080 புலிகளை அடையாளம் கண்டுள்ளது.

    புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், பெரிய பூனைகளின் ஆக்கிரமிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது அதிருப்தியான ஒரு செய்தியாகும்.

    இந்தியாவின் 1,161 புலிகள் தற்போது மத்திய இந்தியாவிலும், 824 மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், 804 சிவாலிக் மலைத்தொடரிலும், 194 வடகிழக்கு மாநிலங்களிலும், 100 சுந்தரவனப் பகுதிகளிலும் உள்ளன.

    உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் போன்ற வடமேற்கு மாநிலங்களில் இருக்கும் அதிக புலிகள், காப்பகங்களுக்கு வெளியே உள்ளன. எனவே அதிகாரிகள் புலிகளின் வாழ்விடப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி டெல்லி
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது ஹரியானா
    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் பாஜக
    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் சென்னை

    மத்திய அரசு

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி இந்தியா
    நாடு முழுவதும் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது - மத்திய மின்சாரத்துறை இந்தியா
    தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு தமிழ்நாடு

    மோடி

    பிபிசி அலுவலகங்களில் இரண்டாம் நாளாக தொடரும் வருமான வரி சோதனை இந்தியா
    பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா

    நரேந்திர மோடி

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை இந்தியா
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025