NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
    லேசர் மூலம் எதிரி ட்ரோன் சுட்டு வீழ்த்தும் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

    இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 13, 2025
    08:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முதன்முறையாக ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கு அதிக சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற ஒரு எதிர்கால ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய இந்த அமைப்பு ட்ரோனைக் கண்காணித்து, லேசர் கற்றையை செலுத்தி இலக்கை அழித்தது.

    உக்ரைனில் நடந்த போர் போன்ற நவீன போரில் ட்ரோன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டால், இந்த தளம் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு மிகப்பெரிய வல்லமையைக் கொடுக்கும்.

    டிஆர்டிஓ இந்த சோதனை வெற்றியை எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த வெற்றி இந்தியாவை உயர் சக்தி கொண்ட லேசர்-DEW கொண்ட நாடுகளின் பிரத்யேக குழுவில் சேர்க்கிறது.

    நாடுகள்

    லேசர் ஆயுதங்களைக் கொண்ட நாடுகள்

    சமீர் வி காமத், "எனக்குத் தெரிந்தவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை இந்தத் திறனை நிரூபித்துள்ளன.

    இஸ்ரேலும் இதே போன்ற திறன்களில் செயல்பட்டு வருகிறது, இந்த அமைப்பை நிரூபிக்கும் உலகின் நான்காவது அல்லது ஐந்தாவது நாடாக நாம் உள்ளோம் என்று நான் கூறுவேன்." என்று தெரிவித்தார்.

    இது பயணத்தின் ஆரம்பம் என்று காமத் கூறினார், மேலும் டிஆர்டிஓ இதன் மூலம் நமக்கு ஸ்டார் வார்ஸ் திறனை வழங்கும் பல தொழில்நுட்பங்களில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

    உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, நீண்ட தூரத்தில் பல ட்ரோன் தாக்குதலை முறியடித்து எதிரி கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் ஆண்டெனாக்களை அழித்தது. மின்னல் வேக ஈடுபாடு மற்றும் துல்லியம் ஆகியவை இதன் சிறப்புகளாகும்.

    ட்விட்டர் அஞ்சல்

    டிஆர்டிஓவின் எக்ஸ் தள பதிவு

    CHESS DRDO conducted a successful field demonstration of the Land version of Vehicle mounted Laser Directed Weapon(DEW) MK-II(A) at Kurnool today. It defeated the fixed wing UAV and Swarm Drones successfully causing structural damage and disable the surveillance sensors. With… pic.twitter.com/U1jaIurZco

    — DRDO (@DRDO_India) April 13, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டிஆர்டிஓ
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ் பங்களாதேஷ்
    2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக இந்தியா மாறும்: கட்கரி நிதின் கட்காரி
    மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா? வக்ஃப் வாரியம்
    சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் மாநிலங்களவை

    டிஆர்டிஓ

    இந்திய கடற்படையுடன் இணைந்து VLSRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ இந்தியா
    நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி; பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா இந்தியா
    எல்லையை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவை அமைக்க இந்தியா முடிவு இந்தியா

    பாதுகாப்பு துறை

    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு  பிரான்ஸ்
    நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025