NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை

    நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி மருந்து கலவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை

    எழுதியவர் Srinath r
    Dec 21, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சளி எதிர்ப்பு மருந்து கலவையைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.

    உலகளவில் குறைந்தது 141 குழந்தைகள் சளி மற்றும் இருமல் மருந்துகள் வழங்கப்பட்டதால் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்படாத சளி-எதிர்ப்பு மருந்து கலவைகளை வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் ஒரு விவாதத்தைத் தூண்டியதாகவும்,

    அதன் விளைவாக அந்த வயதினருக்கு குறைவாக உள்ள குழந்தைகள் இக்கலவையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

    கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்துகளால், காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகள் உட்பட உலகளவில் 141 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

    2nd card

    தடை செய்யப்பட்டுள்ள மருந்து கலவைகள் எவை?

    இந்தியாவைப் பொறுத்த வரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இவ்வகை மருந்துகளால், குறைந்தது 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதால், இந்தியா பெரும்பாலும் "உலகின் மருந்தகம்" என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையான-மருந்து கலவை (FDC) மீதான கட்டுப்பாட்டாளரின் உத்தரவு, புதன்கிழமை பத்திரிகையாளர்களுக்கு வெளியிடப்பட்டது.

    மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை "4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் FDC பயன்படுத்தக்கூடாது" என்ற எச்சரிக்கையுடன் மருந்துகளை விற்பனை செய்யவும் அந்த அறிக்கையில் உத்தரவிட்டுள்ளது.

    நிலையான மருந்து கலவையில் குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபைனிலெஃப்ரின் ஆகியவை அடங்கும். இது சாதாரண சளி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க சிரப்கள் அல்லது மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உஸ்பெகிஸ்தான்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    "இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி அமித்ஷா
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா
    பெரும் ரயில் விபத்தினை தவிர்த்த மதுரை ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது அறிவிப்பு  விருது
    2023 Year Roundup- இந்தாண்டில் உயிரிழந்த திரைத்துறை பிரபலங்கள் ஒரு பார்வை ரஜினிகாந்த்

    உஸ்பெகிஸ்தான்

    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது இந்தியா
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025