NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்களுக்கு உரிய வரியினை செலுத்தாமல் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

    மேலும், மதுபாட்டில்களின் விலையும் கூடுதலாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.

    இதன் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புடையோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சோதனை 

    துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை ஈடுபாடு 

    கடந்த 26ம் தேதி துவங்கிய இந்த சோதனை 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகம், காந்தி கிராமம் இபி காலனியிலுள்ள சோபனா-பிரேம்குமார் ஆகியோர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனையானது நடக்கிறது.

    சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு கருதி ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

    இதற்கிடையே கரூர்-சேலம் இடையே உள்ள நெடுஞ்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பிரம்மாண்டமாக ஓர் வீட்டினை கட்டி வருகிறார்.

    அந்த வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    மத்திய அரசு

    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    நகர வாரியாக பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை என்ன?  சென்னை
    '40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ் தனுஷ்
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  பாஜக
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்  போராட்டம்
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025