NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023
    04:40 pm
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை

    தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் பாட்டில்களுக்கு உரிய வரியினை செலுத்தாமல் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும், மதுபாட்டில்களின் விலையும் கூடுதலாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புடையோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    2/2

    துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை ஈடுபாடு 

    கடந்த 26ம் தேதி துவங்கிய இந்த சோதனை 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் கார்த்திகேயன் இல்லம் மற்றும் அலுவலகம், காந்தி கிராமம் இபி காலனியிலுள்ள சோபனா-பிரேம்குமார் ஆகியோர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனையானது நடக்கிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு கருதி ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே கரூர்-சேலம் இடையே உள்ள நெடுஞ்சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் பிரம்மாண்டமாக ஓர் வீட்டினை கட்டி வருகிறார். அந்த வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    தமிழ்நாடு

    மத்திய அரசு

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா

    தமிழ்நாடு

    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  அரசு மருத்துவமனை
    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023