NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் டெல்லி கேட் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித்.

    இவரது மனைவியின் பெயர் நிஷா, இவர்களுக்கு மிராப் என்னும் 10 வயது மகனும், கைனன் என்னும் 6 வயது மகளும் இருந்துள்ளார்கள்.

    கடந்த 22ம் தேதி விளையாட வீட்டின்வெளியே சென்ற குழந்தைங்களை காணவில்லை என்று நிஷா தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி கேட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

    அதில் 22ம் தேதி குழந்தைகள் வெளியில் விளையாடியதற்கான தடங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இதனால் நிஷா மற்றும் ஷாஹித் ஆகியோரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

    அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

    சிறையில் அடைப்பு

    மயக்க ஊசி கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்

    அதன்படி, நிஷாவுக்கும் அந்த உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் 4ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

    சவுத் தனது மனைவியை பிரிந்துவாழந்து வந்துள்ளார்.

    இதனால் நிஷா தனது கணவனை விட்டு வருவதாக சவுத்'திடம் கூறியதாக தெரிகிறது.

    அதற்கு அவர், நீ வேண்டுமானால் வா. குழந்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் நிஷா மற்றும் சவுத் குழந்தைகளை கொல்ல முடிவுசெய்துள்ளனர்.

    சம்பவ தினத்தன்று குழந்தைகளுக்கு மயக்கஊசி கொடுத்து, மயக்கமடைந்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று சடலங்களை பெட்டியில் வைத்து அடைத்துள்ளார்கள்.

    பின்னர் அந்தப்பெட்டியை காரில் ஏற்றிக்கொண்டுச்சென்று கங்கை கால்வாயிலில் தூக்கி வீசியுள்ளனர்.

    இந்த கொடூரக்கொலைக்கு உடந்தையாக இருந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் 4 பேர் மற்றும் நிஷா,சவுத் ஆகிய 6பேரினை தற்போது போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு குடியரசு தினம்
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி

    காவல்துறை

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி தமிழ்நாடு
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025