NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
    இந்தியா

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023, 06:19 pm 1 நிமிட வாசிப்பு
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் டெல்லி கேட் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித். இவரது மனைவியின் பெயர் நிஷா, இவர்களுக்கு மிராப் என்னும் 10 வயது மகனும், கைனன் என்னும் 6 வயது மகளும் இருந்துள்ளார்கள். கடந்த 22ம் தேதி விளையாட வீட்டின்வெளியே சென்ற குழந்தைங்களை காணவில்லை என்று நிஷா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி கேட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் 22ம் தேதி குழந்தைகள் வெளியில் விளையாடியதற்கான தடங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் நிஷா மற்றும் ஷாஹித் ஆகியோரின் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

    மயக்க ஊசி கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்

    அதன்படி, நிஷாவுக்கும் அந்த உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் 4ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சவுத் தனது மனைவியை பிரிந்துவாழந்து வந்துள்ளார். இதனால் நிஷா தனது கணவனை விட்டு வருவதாக சவுத்'திடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர், நீ வேண்டுமானால் வா. குழந்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் நிஷா மற்றும் சவுத் குழந்தைகளை கொல்ல முடிவுசெய்துள்ளனர். சம்பவ தினத்தன்று குழந்தைகளுக்கு மயக்கஊசி கொடுத்து, மயக்கமடைந்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று சடலங்களை பெட்டியில் வைத்து அடைத்துள்ளார்கள். பின்னர் அந்தப்பெட்டியை காரில் ஏற்றிக்கொண்டுச்சென்று கங்கை கால்வாயிலில் தூக்கி வீசியுள்ளனர். இந்த கொடூரக்கொலைக்கு உடந்தையாக இருந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் 4 பேர் மற்றும் நிஷா,சவுத் ஆகிய 6பேரினை தற்போது போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    காவல்துறை
    உத்தரப்பிரதேசம்
    காவல்துறை

    காவல்துறை

    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா

    உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா

    காவல்துறை

    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023