NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்

    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்

    எழுதியவர் Nivetha P
    Feb 26, 2023
    09:36 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதிபந்த் என்பவர் தனது ஆறு கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து குறைந்த வருமானம் மற்றும் காலநிலை மாற்றங்களால் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஆகியோரை கொண்டு விவசாய இழப்புகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி கெட்டுப்போன விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வகையிலான ஒரு வேளாண் தொழில்நுட்ப தொடக்கத்தை துவங்கியுள்ளார்.

    இந்த நிறுவனத்தின் பெயர் S4S டெக்னாலஜி ஆகும். உலகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.

    ஆனால் ஒழுங்கமைக்கப்படாத விநியோக சங்கிலியால் 40%க்கும் மேலான விளைப்பொருட்கள் வீணடிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இத்தகைய சிக்கல்களை தீர்க்க, அவுரங்கபாத்தை சேர்ந்த ரசாயன பொறியாளர் நிதி பந்த் என்பவர் S4Sடெக்னாலஜி (சயின்ஸ் ஃபார் சொசைட்டி)என்னும் உணவு பதப்படுத்தும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    நிதி பந்த் விளக்கம்

    சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்கள் கொண்டு விளைபொருட்கள் பதப்படுத்தல்

    இதில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களின் அதிகப்படியான உற்பத்தியை பிரித்தெடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    நிதி பந்த் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவராவார்.

    நிதிபந்த் இதுகுறித்து பேசுகையில், உத்தரகாண்டில் அடிக்கடி மழை,வெள்ளம் ஏற்படும் காரணத்தினால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளை தொடர்ந்து நஷ்டத்தில் தள்ளும் என்றும் கூறியுள்ளார்.

    இவர் துவங்கியுள்ள நிறுவனம் மூலம் விவசாய கழிவுப்பொருட்களை பதப்படுத்தி அதன்மூலம் விலைமதிக்கத்தக்க உணவு பொருட்களை தயார் செய்து வருகிறார்கள்.

    அதன்படி, தக்காளி பவுடர், இஞ்சி துகள்கள், வெங்காய துகள்கள் போன்றவற்றை சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திர உதவியால் பெண்கள் விளைபொருட்களை மதிக்கத்தக்கப்பொருளாக மாற்றுகிறார்கள்.

    மேலும் இந்த பொருளில் உள்ள நறுமணம், நிறம், சத்துக்கள் 95%வரை அதிலேயே தக்கவைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா

    இந்தியா

    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் டெல்லி
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண் கொரோனா
    சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள் டெல்லி
    நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025