Page Loader
கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

எழுதியவர் Sindhuja SM
Mar 05, 2024
01:18 pm

செய்தி முன்னோட்டம்

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பெயின் பெண்ணின் கணவரிடம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து நேபாளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​ ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஹன்ஸ்திஹா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தும்கா மாவட்டத்தின் ஹன்ஸ்திஹா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, ஒரு தற்காலிக கூடாரத்தில் இரவைக் கழிப்பதற்காக அந்த தம்பதிகள் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திய போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஜார்க்கண்ட் 

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம்

அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் அந்த தம்பதியினரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தும்காவில் உள்ள ஃபுலோ ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். "நாங்கள் விரைவான விசாரணையை மேற்கொண்டோம். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இருந்து, அவர்களுக்கு(பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது கணவர்) அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம். விரைவாக விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவோம்" என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.