NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை

    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை

    எழுதியவர் Nivetha P
    Mar 30, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிந்து தற்போது பொது தேர்வு நடந்து வருகிறது.

    அதனை தொடர்ந்து 10ம் வகுப்புக்கான பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி துவங்கவுள்ளது.

    அதற்கு முன்னர் செய்முறை தேர்வினை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த மார்ச் 20ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் செய்முறை தேர்வானது அந்தந்த பள்ளிகளில் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது இந்த கால அவகாசம் மார்ச்31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    இந்த காலநீட்டிப்பின் காரணம் என்னவென்றால், தமிழகம் முழுவதும் செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    தனிக்கவனம் செலுத்தவேண்டும்

    மாணவர்கள் நலன் கருதி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

    ஏற்கனவே, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட்டான விவகாரத்தை தொடர்ந்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    இதனையடுத்து செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    மாணவர்கள் நலன் கருதியே இந்த கால நீட்டிப்பு தற்போது செய்யப்பட்டுள்ளது என்று தேர்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    செய்முறை தேர்விலேயே 25 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என்றால், மொழி பாடங்களின் பொது தேர்வின் போதும் இது தொடரும் என்ற கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை கடலூர்
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் கொரோனா
    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு வேங்கை வயல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025