Page Loader
ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம்

எழுதியவர் Nivetha P
Sep 02, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் என்னும் மாவட்டத்தில் 21 வயதுடைய பழங்குடியின பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவரை விட்டுவிட்டு வேறொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்த உண்மையினை அறிந்த அந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை கடத்தி தங்கள் தலியாவத் கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை அங்கு வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கைது 

புகாரின் பேரில் 7 பேரை கைது செய்த காவல்துறை 

மேலும், ஆத்திரம் தாங்காத அப்பெண்ணின் கணவரும், உறவினர்களும் அந்த பெண்ணை ஊரார் மத்தியில் வைத்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் இந்த கொடூர நிகழ்வை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறை அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்ட அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அப்பெண்ணின் கணவர் உள்பட 7 பேரினை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.