NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை

    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி அண்ணாசாலை செட்டிவீதி பகுதியில் பை ஒன்று வெகுநேரமாக கேட்பாரற்று சாலையோரம் கிடந்துள்ளது.

    இதனையடுத்து அப்பகுதியில் டீ கடை வைத்துள்ள பெரியசாமி(45) என்பவர் அருகில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரையும் அழைத்து கொண்டு அந்த பையின் அருகில் சென்று எடுத்து பார்த்துள்ளார்.

    அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பையுடன் டீ கடை உரிமையாளரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    அந்த பையில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் வைத்து எண்ணிப்பார்த்துள்ளனர்.

    அப்போது அதில் 49 லட்சம் இருந்த நிலையில், அதனை உயரதிகாரிகள் அறிவுறுத்தல்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.

    போலீசார் அறிவுறுத்தல்

    சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்

    ஆனால் ஆட்சியர் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தியதால், பணம் அங்கு ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து ஆட்சியர் மணிகண்டன், பணத்திற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளார்கள்.

    அதன்படி அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, இருசக்கரத்தில் அந்தப்பக்கம் செல்லும் ஒருவரது பை அவரது பாக்கவாட்டில் இருந்து கீழேவிழுவது பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் வெங்கட்ட நகரை சேர்ந்த சங்கர் போர்வால் தனது பணத்தினை வங்கியில் செலுத்த சென்றபொழுது தவற விட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

    அவரை அந்த பணம் குறித்த ஆவணங்களை வரும் திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுச்சேரி
    இந்தியா

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    இந்தியா

    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் பிரதமர் மோடி
    அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்! மெட்டா
    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்திய ராணுவம்
    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025