NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
    இந்தியா

    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை

    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023, 06:41 pm 0 நிமிட வாசிப்பு
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை
    புதுச்சேரி சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் ரொக்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - போலீஸ் விசாரணை

    புதுச்சேரி அண்ணாசாலை செட்டிவீதி பகுதியில் பை ஒன்று வெகுநேரமாக கேட்பாரற்று சாலையோரம் கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் டீ கடை வைத்துள்ள பெரியசாமி(45) என்பவர் அருகில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரையும் அழைத்து கொண்டு அந்த பையின் அருகில் சென்று எடுத்து பார்த்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பையுடன் டீ கடை உரிமையாளரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த பையில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் வைத்து எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது அதில் 49 லட்சம் இருந்த நிலையில், அதனை உயரதிகாரிகள் அறிவுறுத்தல்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.

    சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்

    ஆனால் ஆட்சியர் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தியதால், பணம் அங்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஆட்சியர் மணிகண்டன், பணத்திற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளார்கள். அதன்படி அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது, இருசக்கரத்தில் அந்தப்பக்கம் செல்லும் ஒருவரது பை அவரது பாக்கவாட்டில் இருந்து கீழேவிழுவது பதிவாகியுள்ளது. இதற்கிடையில் வெங்கட்ட நகரை சேர்ந்த சங்கர் போர்வால் தனது பணத்தினை வங்கியில் செலுத்த சென்றபொழுது தவற விட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார். அவரை அந்த பணம் குறித்த ஆவணங்களை வரும் திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    புதுச்சேரி

    சமீபத்திய

    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    யூரோ கால்பந்து கோப்பை : இரண்டு புதிய சாதனைகளை படைத்த ரொனால்டோ கால்பந்து
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    இந்தியா

    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா உலக வங்கி
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை

    புதுச்சேரி

    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24 தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023