NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!
    சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசின் புதிய நடவடிக்கை

    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 25, 2023
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர்.

    நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்க குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் மொபைல் எண்களை தடைசெய்யக்கூறி கடந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள DGP மற்றும் கமிஷனர்களுக்கும் உத்தவிட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

    குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் மொபைல் எண்களானது பெரும்பாலான நேரங்களில் போலியான ஆவணங்கள் மற்றும் போலியான தகவல்களைக் கொடுத்தே வாங்கப்படுகின்றன. எனவே, போலியான ஆவணங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட மொபைல் எண்களையும் துண்டிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    இந்த உத்தரவை செயல்படுத்தும் போது தான், சாதாரண பயனர்களின் மொபைல் எண்களுக்கும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்தே பலரும் புகாரெழுப்பி வருகின்றனர்.

    சைபர் கிரைம்

    குற்றச்சம்பவங்களைத் தடுக்க புதிய திட்டம்:

    மக்கள் தங்களுடைய ஆவணங்களை பல இடங்களிலும் சரிபார்ப்புக்காக கொடுக்கின்றனர். அப்படி ஏதோ ஒரு சில இடங்களில் பெறப்படும் ஆவணங்களை மொபைல் எண்களை வாங்க குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே, குற்றச்செயலில் ஈடுபடும் எண் குறித்த தகவல்களை விசாரிக்கும் போது அதனுடன் தொடர்புடைய நிஜ உரிமையாளரின் எண்களும் கண்டறியப்பட்டு அவற்றுடன் சேர்த்து தடை செய்யப்பட்டிருக்கின்றன.

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தங்களுடைய ஆவணங்களை உரிய நிறுவனங்களிடம் கொடுத்து மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய தொலைத் தொடர்புத்துறையின் தரவுப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 12,34,111 எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஹரியானாவில் 5 லட்சம். பீகாரில் 3 லட்சம் எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 3,491 எண்கள் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 473 கொரோனா பாதிப்பு: 7 பேர் உயிரிழப்பு கொரோனா
    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர்  ரிசர்வ் வங்கி
    மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா ஹாக்கி போட்டி
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் மத்திய அரசு

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025