NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்
    முசோரியில் உள்ள 5,101 கட்டிடங்கள் மற்றும் நைனிடாலில் உள்ள 7,793 கட்டிடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 02, 2023
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டின் நைனிடால் மற்றும் முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் ரூ.1,447 கோடி அல்லது ரூ.1,054 கோடி வரை சேதம் ஏற்படும் என்று ரூர்க்கியின் இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) நான்கு ஆண்டுகாலம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஐஐடி ரூர்க்கியின் நில அதிர்வு நிபுணரான யோகேந்திர சிங் கூறுகையில், ஜனவரி மாதம் முடிவடைந்த ஆய்வு, பாதிக்கப்படக்கூடிய மலை பிரதேசங்களின் நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வாகும்.

    முசோரியில் உள்ள 5,101 கட்டிடங்கள் மற்றும் நைனிடாலில் உள்ள 7,793 கட்டிடங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட மென்பொருள் ஆய்வின் அடிப்படையில் "மலைப் பகுதிக்கான அடுத்த தலைமுறை நிலநடுக்க இழப்பை மதிப்பிடும் கருவி" என்ற தலைப்பில் இந்த கணக்கீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    முசோரி

    கட்டுமானம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய கண்டறிய வேண்டும்

    "இரண்டு மலை பிரதேசங்களின் செயற்கைக்கோள் படங்களையும், 10% வீட்டுக் கட்டமைப்புகளின் தரை ஆய்வுகளையும் பயன்படுத்தி நாங்கள் கணக்கெடுப்பை நடத்தினோம். நாங்கள் உருவாக்கிய மென்பொருள் கட்டமைப்புகளின் கீழ் உள்ள பகுதியைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அவற்றின் செலவைக் கணக்கிட்டோம்." என்று சிங் கூறியுள்ளார்.

    முசோரியில் உள்ள உயரமான மலைகளில் கட்டிடங்கள் அமைந்துள்ளதாக சிங் கூறியுள்ளார். "... வீட்டுக் கட்டமைப்புகளின் எண்ணிக்கை நைனிடாலில் அதிகமாக உள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இது முசோரியுடன் ஒப்பிடும்போது அதிக இழப்புகளைச் சந்திக்கும்." என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், இரண்டு மலை பிரதேசங்களிலும் கட்டுமானம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய மிகவும் பாதிக்கப்படக்கூடிய சரிவுகளைக் கண்டறிய ஒரு ஆய்வுக்கு ஆணையிடுமாறு சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    இந்தியா

    அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி காங்கிரஸ்
    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் ஓய்வூதியம்
    பிப்ரவரி 27க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025