NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
    இந்தியா

    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023, 04:42 pm 1 நிமிட வாசிப்பு
    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
    ராம் ரஹீம் மாபெரும் கேக்கை வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஜாமீனில் வெளியே வந்த தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். பலாத்காரம் மற்றும் கொலைக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிர்சா-தேரா தலைவர், ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 40 நாள் ஜாமீனில் சனிக்கிழமை அன்று வெளியேறினார். அதன்பின், உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது பர்னாவா ஆசிரமத்திற்கு வந்த அவர் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி இருக்கிறார். ஒரு மாபெரும் கேக்கை வைத்து ராம் ரஹீம் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாமீன் மனுவில், நாளை(ஜன 25) கொண்டாடப்படும் தேரா முன்னாள் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவதாக ராம் ரஹீம் தெரிவித்திருந்தார்.

    ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு

    சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், "ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறைந்தது ஐந்து கேக்குகளையாவது வெட்ட வேண்டும்." என்று இவர் கூறியதைக் கேட்க முடிகிறது. ஆயுதங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது(வாளால் கேக் வெட்டுவது) ஆயுத சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். ராம்ரஹீம் நேற்று(ஜன 23) தனது பிரிவின் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெகா தூய்மை பிரச்சாரத்தை மெய்நிகராக தொடங்கி வைத்தார். ஹரியானாவைச் சேர்ந்த சில மூத்த பாஜக தலைவர்கள், ராஜ்யசபா எம்பி கிரிஷன்லால் பன்வார், முன்னாள் அமைச்சர் கிரிஷன்குமார் பேடி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராம் ரஹீமுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கடந்த 14 மாதங்களில் இது நான்காவது முறையாகும். கடந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    பாஜக

    புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கு - திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் புதுச்சேரி
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு இந்தியா
    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு இந்தியா
    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023