NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்
    ராம் ரஹீம் மாபெரும் கேக்கை வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜாமீனில் வெளியே வந்த தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் வாளால் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

    பலாத்காரம் மற்றும் கொலைக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிர்சா-தேரா தலைவர், ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து 40 நாள் ஜாமீனில் சனிக்கிழமை அன்று வெளியேறினார்.

    அதன்பின், உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள தனது பர்னாவா ஆசிரமத்திற்கு வந்த அவர் கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

    ஒரு மாபெரும் கேக்கை வைத்து ராம் ரஹீம் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஜாமீன் மனுவில், நாளை(ஜன 25) கொண்டாடப்படும் தேரா முன்னாள் தலைவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவதாக ராம் ரஹீம் தெரிவித்திருந்தார்.

    ராம் ரஹீம்

    ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு

    சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில், "ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறைந்தது ஐந்து கேக்குகளையாவது வெட்ட வேண்டும்." என்று இவர் கூறியதைக் கேட்க முடிகிறது.

    ஆயுதங்களை பொதுவில் காட்சிப்படுத்துவது(வாளால் கேக் வெட்டுவது) ஆயுத சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும்.

    ராம்ரஹீம் நேற்று(ஜன 23) தனது பிரிவின் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மெகா தூய்மை பிரச்சாரத்தை மெய்நிகராக தொடங்கி வைத்தார்.

    ஹரியானாவைச் சேர்ந்த சில மூத்த பாஜக தலைவர்கள், ராஜ்யசபா எம்பி கிரிஷன்லால் பன்வார், முன்னாள் அமைச்சர் கிரிஷன்குமார் பேடி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ராம் ரஹீமுக்கு ஜாமீன் வழங்கப்படுவது கடந்த 14 மாதங்களில் இது நான்காவது முறையாகும். கடந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு இந்தியா
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு
    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ் இந்தியா

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025