NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்
    பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் சென்றதற்காக அவரை தகாத முறையில் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்வாகியை பற்றியும் ஆளுநர் பேசி இருக்கிறார்

    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று(பிப் 13) மாநிலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது, "சமூக நீதி என்பது இது தானா" என்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை சாடியுள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.அம்பேத்கர் என்ற தலைப்பில் பேசிய ஆளுநர், தலித்துகளுக்கு எதிராக மாநிலத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களையும், சமூக நலத் திட்டங்களில் இருந்து அரசின் நிதியை திசை திருப்புவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    "மோடி@20" மற்றும் "அம்பேத்கரும் மோடியும்" ஆகிய புத்தகங்களின் தமிழாக்கத்தை ஆளுநர் இன்று வெளியிட்டார்.

    அப்போது, அம்பேத்கர் மற்றும் அவரது சாதனைகள் பற்றி பேசும்போது அவர் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

    தமிழ்நாடு

    ஆளுநர் உரையின் சுருக்கம்:

    சமூக நீதி பற்றி எவ்வளவோ பேசுகிறோம், ஆனால், ஒவ்வொரு நாளும் இங்கு தலித்துகளுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது இன்னும் தடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

    தலித் மக்கள் குடிக்கும் நீரில் மனித கழிவுகள் கலப்பது போன்ற சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

    பட்டியலின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 7% பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறினார்.

    புதுக்கோட்டை வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தை பற்றி பேசிய ஆளுநர்,

    பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் சென்றதற்காக அவரை தகாத முறையில் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்வாகியை பற்றியும் பேசி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேங்கை வயல்
    ஸ்டாலின்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    வேங்கை வயல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் தமிழ்நாடு

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் தென்காசி
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025