NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?
    புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி நீண்ட தேடுதலுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்

    500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2025
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    புனேவின் ஸ்வர்கேட் பணிமனையில் ஒரு பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்ற 37 வயது நபர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்.

    அவர் குற்றம் இழைத்த பின்னர் தலைமறைவாக இருந்த நிலையில், ​​குடிநீர் தேடி ஒரு நபரிடம் அணுகியபோது, அவர் காவல்துறையினரின் இன்ஃபார்மராக மாறியது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    கிட்டத்தட்ட 500 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், நாய் படைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட கிராமவாசிகளுடன், 75 மணி நேர துரத்தலுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு தத்தாத்ரே கைது செய்யப்பட்டதாக புனே உயர் போலீஸ் அதிகாரி அமிதேஷ் குமார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    தேடுதல் வேட்டை

    ட்ரோன்கள் மூலமும் தேடுதல் வேட்டை

    குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க புனே காவல்துறை ட்ரோன்கள் உட்பட ஒரு பெரிய மனித வேட்டையை நடைபெற்றது என போலீஸ் அதிகாரி அமிதேஷ் தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், தகவல் கொடுத்தவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குள் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக அமிதேஷ் தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு தகவல் அளித்த நபருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டபடி ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்.

    மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைக்காக ஒரு சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவு நீதிமன்றத்தில் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

    சுற்றிவளைப்பு

    குற்றவாளியை சுற்றி வளைத்தது எப்படி என காவல்துறை விளக்கம்

    "கடந்த மூன்று நாட்களாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடி வந்தோம். சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்... 400 முதல் 500 உள்ளூர் கிராமவாசிகளின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் நாய் படை பல இடங்களைக் கண்டறிந்தது, இது குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவியது. அதிகாலை 1.10 மணிக்கு, நாங்கள் அவரைக் காவலில் எடுத்தோம்," என்று அமிதேஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

    "குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நபரிடம் தண்ணீர் குடிக்க வந்திருந்தார். அவர் அளித்த தகவல்களால், வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் முன்னேற முடிந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புனே
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    பலாத்காரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    புனே

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு விபத்து
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  விபத்து
    புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர்  காவல்துறை
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் தந்தை, தாத்தா மீது தற்கொலை வழக்கு பதிவு  போர்ஷே

    பாலியல் வன்கொடுமை

    புதுவை சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல்; இருவர் கைது  புதுவை
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மாற்றம்; சிறப்பு படை விசாரணை துவக்கம் புதுச்சேரி
    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு புதுச்சேரி

    பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025