NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 19, 2023
    05:13 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில், இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், போலீசார் எப்படி துப்பு துலக்கினர் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், வேலையை முடித்துவிட்டு, தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த சௌமியா விஸ்வநாதன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    card 2

    டெபிட் கார்டு மூலம் சிக்கிய கொலையாளி 

    ஆனால், ஒரு வருடம் கொலையாளிகள் பற்றி தடயம் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்த போலீசார், 2009 - இல் நடைபெற்ற ஒரு கொலைக்கு காரணமானவர்களை பிடித்து விசாரித்த போது, சௌம்யாவின் கொலைக்கும் தாங்களே காரணம் என கூறியதுபோது, டெல்லி காவல்துறை சற்றே அதிர்ந்தது.

    மார்ச் 18, 2009 அன்று ஜிகிஷா கோஷ் என்பவர் கொள்ளையடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ் குண்ட் பகுதியில் இருந்து ஜிகிஷாவின் உடல் மீட்கப்பட்ட இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு கடையில் ஜிகிஷாவின் டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஒருவர் ஷாப்பிங் செய்தது தெரியவந்தது.

    card 3

    டாட்டூ, வாக்கி டாக்கி உடன் வலம் வந்த கொலைகாரர்கள் 

    அந்த கடையின் CCTV பதிவை ஆராய்ந்த போது, ​​அந்த நபர் கையில் பச்சை குத்தியிருப்பதைக் கண்டறிந்தனர். அவருடன் வந்த மற்றொரு நபர், கையில் வாக்கி டாக்கி வைத்திருந்ததையும் கவனித்த போலீசார், உடனே துப்பு துலக்க தொடங்கினர்.

    பின்னர் டெல்லி காவல்துறையின் மனித புலனாய்வு வலையமைப்பில் அதிகாரிகள் உன்னிப்பாக பணியாற்றினர், விரைவில், அதன்படி, டெல்லி போலீஸ் குழு, மசூத்பூரில் உள்ள மாலிக் என்ற குற்றவாளியை கண்டுபிடித்தது.

    மாலிக் தன் கையில் தனது பெயரை டாட்டூ போட்டு கொண்டிருந்தார்.

    அவனோடிருந்த கபூர் என்ற கூட்டாளி தான், ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து வயர்லெஸ் வாக்கி டாக்கியை திருடியவன் என கண்டுபிடித்த காவல்துறை, இருவரையும் கைது செய்தது.

    card 4

    சௌம்யாவின் கொலையில் விலகிய மர்மம்

    விசாரணையில், கொலைகாரர்கள், வசந்த் விஹாரில் அருகிலிருந்து ஜிகிஷாவை கடத்திச் சென்று, பின்னர் அவளைக் கொள்ளையடித்த பின்னர் கொலை செய்து உடலை வீசியதை ஒப்புக்கொண்டனர்.

    அப்போது அதற்கு முந்தைய ஆண்டு, அவர்கள் மற்றொரு பெண்ணைக் கொன்றதாகவும் ஒப்பு கொண்டனர்.

    விசாரணையில் அது இளம் பத்திரிகையாளர் சௌம்யா என தெரிய வந்தது

    செப்டம்பர் 30 , 2008 இரவு, தன்னுடைய அலுவலக பணியை முடித்துகொண்டு சௌமியா, வசந்த் குஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது குற்றவாளிகள் மதுபோதையில் அதே ரோட்டில் பயணித்து கொண்டிருந்தனர்.

    ஒரு கார், அதிலும் ஒரு பெண் ஓட்டும் கார், தங்களை முந்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத கொலையாளிகள், சௌமியாவின் காரை வழிமறிக்க முயற்சித்துள்ளனர்.

    card 5

    15 வருடங்கள் கழித்து கிடைத்த நீதி

    ஆனால் சௌமியா வேகமெடுத்து காரை தொடர்ந்து ஒட்டியதில் கோபம் கொண்ட கொலையாளிகளில் ஒருவன், சௌம்யாவை தன்னுடைய கை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

    துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே இறந்தார் சௌம்யா. அவருடைய கார் அங்கிருந்த டிவைடர் மீது மோதி நின்றது.

    இதை பார்த்ததும் குற்றவாளிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

    எனினும், 20 நிமிடங்களுக்குப் பிறகு, போதை தெளிந்ததும் மீண்டும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    ஆனால், அங்கே போலீஸ்காரர்களைக் கண்டதும், அவர்கள் ஓடிவிட்டனர்.

    தற்போது, இந்த கொலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததை எண்ணி, சௌம்யாவின் தாய் கண்ணீருடன், காவல்துறைக்கு நன்றி கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    கொலை

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்

    டெல்லி

    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது கைது
    சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ்
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்

    காவல்துறை

    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு காவல்துறை
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  விநாயகர் சதுர்த்தி
    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது தமிழ்நாடு
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி சீமான்
    கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு தமிழ்நாடு
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025