NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?
    சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்படும்போது, அவருக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.

    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்?

    எழுதியவர் Srinath r
    Oct 18, 2023
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக் என 4 பேரும் குற்றவாளிகள் எனவும், இதில் அஜய் சேத்தி குற்றத்தை செய்ய உடந்தையாக இருந்துள்ளதாக சாகேத் நீதிமன்றம் கூறியுள்ளது.

    கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2016 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இருந்தாலும், சட்ட சிக்கல்களால் தண்டனை அறிவிக்கப்படுவது தாமதமானது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    என்ன ஆனது சோமியா விஸ்வநாதனுக்கு?

    கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், வேலையை முடித்துவிட்டு, தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்த சௌமியா விஸ்வநாதன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    அவர் இந்தியா டுடே நிறுவனத்தின், 'ஹெட்லைன்ஸ் டுடே' என என்ற புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

    சௌமியா விஸ்வநாதன் முதலில் கார் விபத்தில் இறந்தார் என சொல்லப்பட்டது. பின்னர் வெளியான உடற்கூறு ஆய்வில், அவரது தலையில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த அவர் கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியானது.

    மேலும் போலீசார் கைப்பற்றிய சிசிடிவி கட்சியில், அவரது கார் வேறொரு காரால் துரத்தப்பட்டு அவர் சுடப்பட்டது தெரியவந்தது.

    3rd card

    கொலை "சிலிர்ப்பாக" இருந்தது என விவரித்த கொலையாளிகள் 

    போலீசார் இந்த வழக்கு குறித்து, சம்பவம் நடந்த இடத்தில் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ஃபரிதாபாத் பகுதியில் வேறொரு இளம் பெண் கொலை வழக்கில் போலீசார் இருவரை கைது செய்தனர்.

    ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், சௌமியா விஸ்வநாதனை தாங்கள் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அந்தக்கொலையை "சிலிர்ப்பான சம்பவம்" என அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.

    பின்னர் போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, கடந்த 2009 ஆம் ஆண்டு 620 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் 'திருட்டு' கொலைக்கு காரணமாக சொல்லப்பட்டிருந்தது.

    தற்போது நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை
    கொலை

    சமீபத்திய

    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    டெல்லி

    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா ஜி20 மாநாடு
    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு குறிப்புகள்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது கைது
    சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ்

    காவல்துறை

    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு காவல்துறை
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  விநாயகர் சதுர்த்தி
    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது தமிழ்நாடு
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி சீமான்
    கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு தமிழ்நாடு
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    கொலை

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025