NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்
    இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்

    இந்தி மொழியின் திணிப்பு விவகாரம் - மன்னிப்பு கோரியது நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம்

    எழுதியவர் Nivetha P
    Jun 13, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டது.

    அதில்,'தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அனைத்து மண்டல அலுவலகங்களின் அறிக்கைகளும் இந்தியில் தான் முழுக்கமுழுக்க இருக்கவேண்டும்'.

    'தலைமையகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும், அனைத்து அலுவலகப்பணிகளும் கூட இந்தியில் தான் இருக்கவேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தநிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் மொழிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படாத நிலையில், இந்திமொழிக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது" என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    மேலும்,"எங்கள் மரபு மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழி சமமாக நடத்தப்படவேண்டும். எங்கள் மண்ணில் தமிழுக்கு பதில் இந்தி திணிக்கப்பட்டால் அதனை எதிர்ப்போம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    மன்னிப்பு கோரல் 

    பிராந்திய மொழிகள், கலாச்சாரங்கள் மீது நம்பிக்கை அதிகம் 

    இந்நிலையில், இந்த இந்தி மொழியின் விவகாரம் குறித்து தற்போது நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம், மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    அதன்படி அந்த பதிவில், 'இந்த இந்தி மொழி விவகாரம் தொடர்பாக நாங்கள் யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம். பிராந்திய மொழிகள், கலாச்சாரங்களை மதிக்கும் பணியின் சூழல் மீதே எங்களுக்கு நம்பிக்கை அதிகம்'.

    'நமது தேசம் முழுவதும் உள்ள வளமான கலாச்சார மரபு மற்றும் மொழியியல் உள்ளிட்டவையோடு நாங்கள் முழுவதுமாக இணைந்துள்ளோம். அதன் மீது எங்களுக்கு மரியாதையும் அதிகம் உள்ளது' என்று அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ட்விட்டர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மு.க ஸ்டாலின்

    அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்  அமைச்சரவை
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு  திமுக
    பிரதமர், ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஏழை மாணவியை தங்கவைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி  கவர்னர்
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு  ஆளுநர் மாளிகை

    ட்விட்டர்

    மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  சமூக வலைத்தளம்
    உண்மையான சச்சின் டெண்டுல்கர் யார்? ரசிகரின் கேள்விக்கு சச்சினின் கியூட் பதில்  சச்சின் டெண்டுல்கர்
    மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்?  எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025