NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC
    LICயின் மொத்த முதலீடுகளில்(AUM) அதானி குழும பங்குகளின் விகிதம் 1 சதவீதத்திற்கும்(0.975%) கீழ் என்பதால் முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றும் LIC தெரிவித்திருக்கிறது.

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    09:18 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC), அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை இன்று(ஜன 30) வெளியிட்டிருக்கிறது.

    கடந்த சில ஆண்டுகளாக LIC வாங்கிய அதானி குழும பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.30,127 கோடி என்று கூறிய LIC, இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு ஜனவரி 27ஆம் தேதியின் முடிவில் ரூ.56,142 கோடியாக உயர்ந்திருந்தது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

    LIC வாங்கி இருக்கும் அதானி நிறுவன பங்குகள் "AA" அல்லது அதற்கு மேல் உள்ள தரநிலைகளில் இருப்பதால், LICயின் முதலீடுகள் IRDAI வழிகாட்டுதல்களின் படியே இருக்கிறது என்பதையும் LIC கூறி இருக்கிறது.

    பங்குசந்தை

    அதானி குழுமத்துடன் கலந்தாலோசிக்க இருக்கும் LIC

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது.

    மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக சரிவடைந்து வருகிறது.

    இந்த பிரச்சனையை அடுத்து, LIC முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக LIC இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

    இதுகுறித்து பேசிய LIC நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், "உண்மை நிலை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பெரிய முதலீட்டாளர் என்பதால் கேள்விகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் கலந்தாலோசிப்போம்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    இந்தியா

    ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்! வைரல் பாடல்
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா விமானம்
    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம் இந்தியா
    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025