பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!
கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று(டிச:19) கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையின் முடிவில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இமாச்சல முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று(டிச:19) தலைநகரில் சந்தித்து பேசியுள்ளார். இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கொரோனா பாதிப்பு- ஒரு அப்டேட்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 176 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,75,952 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவால் கேரளாவில் நான்கு பேரும் மஹாராஷ்டிராவில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,672 ஆக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா எண்ணிக்கையில் ஆக்ட்டிவ் கேஸ்கள் வெறும் 0.01 சதவீதம் தான். அதே போல், நாடு 98.8 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டது என்று மத்திய அமைச்சகத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.