NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
    இந்தியா

    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 05:58 pm 0 நிமிட வாசிப்பு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    மதுரையில் உலக பிரசித்திப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வரும் ஜனவரி 15ம்தேதி நடைபெறவுள்ளது. அவனியாபுரம் அம்பேத்கர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பிற சமூகத்தினரும் இங்கு வசிக்கிறார்கள். கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் சூழல் அங்கு நிலவுகிறது. இதனையடுத்து அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல்செய்தனர். அதில், "ஆதிதிராவிடர் சமூகம் இங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். இது சரியல்ல, எனவே கடந்தாண்டுபோலவே, இந்தாண்டும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவு

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த கூட்டத்தில் சுமூகமான முடிவு ஏற்பட்டால், அனைத்து சமூக மக்களும் இணைந்து ஆலோசனை குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, போட்டியை தலைமை ஏற்று நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ ராஜஸ்தான்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023