NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    05:58 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் உலக பிரசித்திப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வரும் ஜனவரி 15ம்தேதி நடைபெறவுள்ளது.

    அவனியாபுரம் அம்பேத்கர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    பிற சமூகத்தினரும் இங்கு வசிக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

    ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் சூழல் அங்கு நிலவுகிறது.

    இதனையடுத்து அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல்செய்தனர்.

    அதில், "ஆதிதிராவிடர் சமூகம் இங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். இது சரியல்ல, எனவே கடந்தாண்டுபோலவே, இந்தாண்டும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிடவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    மாவட்ட நிர்வாகம்

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவு

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அந்த கூட்டத்தில் சுமூகமான முடிவு ஏற்பட்டால், அனைத்து சமூக மக்களும் இணைந்து ஆலோசனை குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு, போட்டியை தலைமை ஏற்று நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025