NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள்

    எழுதியவர் Nivetha P
    Jan 11, 2023
    11:20 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் வருடந்தோறும் மிக விமர்சையாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுபோட்டி கொண்டாடப்படும்.

    அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில், ஒரு போட்டியில் மட்டுமே ஒரு காளையானது பங்கேற்க முடியுமாம்.

    இதனுள், முதன்முதலாக அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காணவே வெளிநாட்டினர் வந்ததால், இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்திப்பெற்றது ஆகும்.

    எனவே, இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் அதிகளவில் பங்கேற்கப்படுகிறது.

    15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு நேற்றுமுதல் துவங்கியுள்ளது.

    இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் madurai.nic.in என்னும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் காளைகள் பெயர் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பெயர் பதிவு செய்யவேண்டும்.

    வெற்றிபெறுவோருக்கு புது கார்

    பல்வேறு பரிசுகள் அறிவிப்பு - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டு கூடுதல் எதிர்பார்ப்பு

    இதனையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி துணைத்தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில்,

    முன்பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் தேர்வு செய்யப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் மீண்டும் போட்டி நடைபெறும் தினத்தன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே களத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

    மேலும், இந்தாண்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துக் காளைகளுக்கும் தங்க காசும், வெற்றிபெறும் காளைக்கு ஓர் புதிய காரும் பரிசாக அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

    அதே போல், அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசும், வெற்றிபெறும் வீரருக்கு ஓர் புதிய காரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து, டிவி, பிரிட்ஜ், பீரோ, கட்டில் போன்ற பல்வேறு பரிசுகளும் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    மு.க.ஸ்டாலின்

    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு தமிழ்நாடு
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025