NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்
    7 பேர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

    ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 02, 2024
    10:31 am

    செய்தி முன்னோட்டம்

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "ஃபெஞ்சல்" புயல், கடந்த சனிக்கிழமை மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்க துவங்கியது.

    அதன் பிறகு, நேற்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புயல் தமிழக உள்மாவட்டங்கள் நோக்கி நகரத்துவங்கியது.

    இதனால் விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.

    அதில் குறிப்பாக திருவண்ணாமலையில், தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    7 பேர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | திருவண்ணாமலையில் நேற்று வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம். குறுகலான பாதை என்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மரத்தை அறுக்கும் இயந்திரம் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு… pic.twitter.com/4LQiwiOa6g

    — Sun News (@sunnewstamil) December 2, 2024

    மீட்புப் பணிகள்

    மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்

    மணல் சரிவில் சிக்கியவர்களை மீட்க விழுப்புரத்திலிருந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மண் சரிவின் போது, சுமார் 40 டன் எடை கொண்ட 14 அடி உயரப் பாறை உருண்டு விழுந்தது எனவும் செய்திகள் கூறுகின்றன.

    விவரம் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பலர் நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மண் சரிவில், 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    புயல் எச்சரிக்கை
    வங்க கடல்
    காற்றழுத்த தாழ்வு நிலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் பெங்களூர்
    திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு  தமிழ்நாடு
    திருவண்ணாமலை கோயிலில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  தமிழ்நாடு
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்  பிறந்தநாள்

    புயல் எச்சரிக்கை

    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் சென்னை
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு சென்னை
    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு சென்னை
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை

    வங்க கடல்

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

    காற்றழுத்த தாழ்வு நிலை

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! வங்க கடல்
    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை
    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025