NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
    இந்தியா

    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி

    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
    எழுதியவர் Sindhuja SM
    Jan 23, 2023, 08:10 pm 0 நிமிட வாசிப்பு
    பதவி விலகுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரி
    "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

    சத்ரபதி சிவாஜி குறித்த தனது கருத்துகளுக்காக சமீபத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் பாஜகவின் விமர்சனத்திற்கு ஆளான மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இன்று(ஜன 23) "அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 வயதான ஆளுநர் கோஷ்யாரி, இனி தனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். "புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமியான மகாராஷ்டிராவில் ராஜ்ய சேவக் அல்லது ராஜ்யபாலாக பணியாற்றியது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம்" என்று கோஷ்யாரி கூறி இருக்கிறார்.

    மகாராஷ்டிரா ஆளுநர் வெளியிட்ட அறிக்கை

    பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய மும்பை பயணத்தின் போது, தான் மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததாக கோஷ்யாரி கூறி இருக்கிறார். "கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. சமீபத்தில் பிரதமர் மும்பைக்கு வந்த போது, ​​அனைத்து அரசியல் பொறுப்புகளிலிருந்தும் விலக விரும்புவதாக அவரிடம் தெரிவித்தேன். மேலும், இனி எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுதுதல் போன்ற அமைதியான செயல்களில் செலவிட விரும்புகிறேன். பிரதமரிடம் இருந்து நான் எப்போதும் அன்பையும் நேசத்தையும் பெற்றுள்ளேன். இந்த விஷயத்திலும் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று கோஷ்யாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    மோடி

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023