NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல் 

    'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 06, 2024
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தான் மனச்சோர்வடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

    "இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று போலே பாபா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    முக்கிய குற்றவாளி கைது 

    இதற்கிடையில், ஜூலை 2 ஆம் தேதி 121 உயிர்களைக் கொன்ற ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தேவ் பிரகாஷ் மதுகர், நேற்று இரவு டெல்லியில் காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் அவர் உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அவர் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். தேவ் பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரபிரதேச காவல்துறை முன்பு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜூலை 3 அன்று, ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை மாநில அரசு அமைத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி கோவிலில் ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: பிரதிஷ்டை விழா நிறைவு அயோத்தி
    அயோத்தி ராமர் கோயிலின் முதல் வான்வழி காட்சிகள்: பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கப்பட்ட வீடியோ வெளியீடு  அயோத்தி
    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை இந்தியா
    "பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு  அயோத்தி

    இந்தியா

    'கேரளம்' ஆகிறது கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் கேரளா
    ஜூலை 1 முதல் விலை உயர்வை அமல்படுத்த உள்ளது ஹீரோ மோட்டோகார்ப்  ஹீரோ
    கார்கில் போருக்குப் பதில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கக்கூடும் என முன்னாள் தூதுவர் பகீர் வாக்குமூலம் இஸ்ரேல்
    96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது ரிலையன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025