NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 

    சச்சின் டெண்டுல்கரின் காவலாளி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கிரிக்கெட் ஜாம்பவான் பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்(எஸ்ஆர்பிஎஃப்) ஜாம்னர் நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

    அந்த நபர் பிரகாஷ் கப்டே என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது பூர்வீக கிராமத்திற்கு ஒரு குறுகிய விடுமுறைக்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    கப்டே(39) தனது சர்வீஸ் துப்பாக்கியால் கழுத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள், ஒரு சகோதரர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

    இந்தியா 

    கப்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

    இன்று அதிகாலை 1:30 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாம்னர் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் கிரண் ஷிண்டே தெரிவித்தார்.

    "முதற்கட்ட விசாரணைகளின்படி, சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீவிர நடவடிக்கையை எடுத்திருக்கலாம். ஆனால் விசாரணையின் முழு விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று திரு ஷிண்டே செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் இடம் கூறியுள்ளார்.

    கப்டேவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜாம்னர் போலீசார் அவருடைய மரண அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

    மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சகாக்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தற்கொலை
    சச்சின் டெண்டுல்கர்

    சமீபத்திய

    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    சச்சின் டெண்டுல்கர்

    ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்
    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் ஐபிஎல்
    'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்! மும்பை இந்தியன்ஸ்
    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025