NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு
    மொத்த உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவு பருப்புகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை

    விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 27, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இந்திய சந்தைக்கு வந்து சேரும் வரை தேசிய தானியக் களஞ்சியத்தில் இருக்கும் துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் இன்று(ஜூன் 27) தெரிவித்துள்ளது.

    இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இன்னும் இந்திய சந்தைகளுக்கு வந்து சேராததால், இந்தியாவில் துவரம் பருப்பின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

    எல் நினோ வானிலை காரணமாகவும், பருவமழை இயல்பை விட 23% குறைவாக பதிவாகி இருப்பதாலும், இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதனால், துவரம் பருப்பு தற்போது 190 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

    தேவை அதிமாகி விட்டதால் பதுக்கல்களும் அதிகமாகி இருக்கும் என்பதால் அரசாங்கம் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    பிஜேபி

     ஏலம் விடப்படும் துவரம் பருப்புகள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் 

    இந்நிலையில், மத்திய அரசின் கையிருப்பில் இருக்கும் துவரம் பருப்பை ஆன்லைன் மூலம் ஏலம் விடும்படி தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு(NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு(NCCF) ஆகிய கூட்டமைப்புகளுக்கு உணவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இப்படி ஏலம் விடப்படும் துவரம் பருப்புகள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பருப்புகள் அறுவடை செய்யப்பட்டாலும், அவை மொத்த உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில்லை. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் இறக்குமதியை நம்பியுள்ளது.

    உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் பட்சத்தில் விநியோகத்தை அதிகரிக்க பருப்பு வகைகளை அரசாங்கம் எப்போதும் கையிருப்பில் வைத்திருக்கும்.

    அந்த அரசாங்க கையிருப்பில் இருந்து தான் தற்போது துவரம் பருப்புகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் அமெரிக்கா
    இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமெரிக்கா
    "இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு அமெரிக்கா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 23 தங்கம் வெள்ளி விலை

    மத்திய அரசு

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025