
சமையல் எரிவாயுவின் விலை குறையும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அமைச்சரவை நேற்று(ஏப் 6) திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது.
நாட்டில் நிலையான விலையை உறுதி செய்வதற்கும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் புதிய விலை நிர்ணய முறையை அமைச்சரவை அறிவித்தது.
இந்த நடவடிக்கையானது சமையலறைகளுக்கு வழங்கப்படும் குழாய் இயற்கை எரிவாயு(PNG) மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான வழங்கப்படும் இயற்கை எரிவாயு(CNG) ஆகியவற்றின் விலையை வரும் சனிக்கிழமை முதல் 11% வரை குறைக்கும்.
இதற்கான அறிவிப்பை அரசு இன்று வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பொருளாதார நிபுணர் கிரிட் பரிக் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் படி எடுக்கப்பட்ட முடிவு
இந்த முடிவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.
இந்த முடிவு பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) நிறுவன தினத்துடன் ஒத்துப்போகிறது என்றும், இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஏபிஎம் (நிர்வாக விலை பொறிமுறை) எரிவாயு விலை குறைப்பின் தற்காலிக தாக்கம் PNG மற்றும் CNG நுகர்வோருக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நவம்பர் 30, 2022 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்த பொருளாதார நிபுணர் கிரிட் பரிக் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.