NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
    இந்தியா

    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022, 11:02 pm 1 நிமிட வாசிப்பு
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்(படம்: The Indian Express)

    சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, சில நாட்களுக்கு முன் தமிழக அரசு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதனையடுத்து, மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கொரோனாவுக்காக தமிழக அரசு பிறப்பித்திற்கும் உத்தரவுகள்: அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும் கொரோனாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களைத் தயாராக வைக்க வேண்டும். N95 முகக்கவசங்கள், பிபிஇ கிட், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாதிரி சோதனைக் கருவிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்களைத் தயார்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி மையங்களும் தயாராக இருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கொரோனா ஒத்திகை!

    கொரோனா பரவலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகைகள் செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார். இதை ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர்களும் கண்காணிக்கின்றனர். அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் போதிய வசதிகள், மெத்தைகள், ஆக்சிஜென் சிலிண்டர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்கின்றனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவனையை மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வுகள் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கோவிட்
    தமிழ்நாடு
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்

    கோவிட்

    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட் தடுப்பூசி

    தமிழ்நாடு

    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் பள்ளி மாணவர்கள்
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்

    இந்தியா

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்

    கொரோனா

    இந்தியாவில் 610 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா
    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை இந்தியா
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023