NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
    இந்தியா

    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    August 30, 2023 | 02:39 pm 0 நிமிட வாசிப்பு
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா

    உலகின் டாப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வர உள்ளதால், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஜி20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் பிரிவுகள் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளன. இதன்படி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்கள், சாப்ட்வேர் அடிப்படையிலான அலாரங்கள் மற்றும் ட்ரோன்கள் கண்காணிக்கவும், உச்சிமாநாட்டின் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும். சந்தேகத்திற்கு இடமில்லாத நடமாட்டத்தைக் கண்காணிக்க இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் யாராவது சுவர்களில் ஏறுவது அல்லது ஓடுவது அல்லது கீழே குனிவது போன்ற அசாதாரண அசைவுகளைச் செய்தால், ஏஐ கேமராக்கள் பாதுகாப்புப் பணியாளர்களை எச்சரிக்கும்.

    டெல்லி வந்துள்ள வெளிநாட்டு உளவு அமைப்புகள்

    கூடுதல் பாதுகாப்பிற்காக, ஜி20 உச்சிமாநாட்டின் போது உயரமான கட்டிடங்களில் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள் மற்றும் ராணுவ துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து சிஐஏ, பிரிட்டனில் இருந்து எம்ஐ 6 மற்றும் சீனாவில் இருந்து எம்எஸ்எஸ் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு உளவு அமைப்புகளின் குழுக்கள் ஏற்கனவே அந்தந்த பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய டெல்லி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஐபி பாதுகாப்பில் அனுபவம் பெற்ற சுமார் 1,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட "சிறப்பு 50" குழுவை மத்திய ரிசர்வ் போலீஸ் படை தயார் செய்துள்ளது. ஜி20 உலகத் தலைவர்களின் உச்சிமாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜி20 மாநாடு
    இந்தியா
    டெல்லி

    ஜி20 மாநாடு

    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்  இந்தியா
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்  மத்திய அரசு
    முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா

    இந்தியா

    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்? சீனா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 30 தங்கம் வெள்ளி விலை
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  மத்திய அரசு
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா

    டெல்லி

    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  எய்ம்ஸ்
    பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்? இந்தியா
    நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்  இந்தியா
    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது? இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023