NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு 
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு

    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 23, 2023
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

    இம்முறை இந்தியாவின் தலைமையில் 2023ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதி வரை ஜி20-மாநாடு நடைபெறவுள்ளது.

    இதில் பேரிடர் அபாயத்தினை குறைக்க புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவின் 3 கூட்டங்கள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இதன் 3வதுகூட்டம் சென்னையில் வரும் 24ம் தேதி முதல் 26ம்தேதி வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் இந்த ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

    இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மாநாடு 

     7,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள் கொண்ட அரங்கம் 

    ஜி 20 மாநாட்டிற்காக டெல்லி மாநிலத்திலுள்ள பிரகதி என்னும் மைதானத்தில் உள்ள ஐடிபிஓ வளாகமானது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

    123 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கட்டிடத்திற்கு 'இன்டர்நேஷனல் எக்சிபிஷன் அண்ட் கன்வென்சன் சென்டர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த கன்வென்சன் சென்டரின் 3ம் லெவலில் 7,000பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகள் கொண்ட அரங்கம் உள்ளதாம்.

    இது ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள ஓபரா ஹவுஸின் 5,500பேர் அமரக்கூடிய வசதி கொண்ட அரங்கத்தினை விட பெரியது என்று கூறப்படுகிறது.

    இது உலகளவில் நடக்கும் மாநாடுகள், கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்டவை நடத்த ஏற்ற இடமாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கட்டிடம் நடக்கவிருக்கும் ஜி 20 மாநாட்டிற்காக வரும் 26ம் தேதி திறக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஜி20 மாநாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்  இந்தியா
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  இந்தியா
    ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  வைரல் செய்தி
    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  இந்தியா

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  தமிழ்நாடு
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025