NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
    தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

    இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையில் மற்றுமொரு வெற்றி: தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 14, 2025
    08:22 am

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB) கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    CBI மற்றும் அமலாக்க இயக்குநரகம்(ED) உள்ளிட்ட நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், மும்பை நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளைத் தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

    2018ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருக்கும் சோக்ஸி, ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவில் இருந்ததாகக்கூறப்படுகிறது.

    ஆதாரங்களின்படி, PNB-ஐ ரூ.13,500 கோடிக்கு மேல் மோசடி செய்ததில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக அவர் தேடப்பட்டுவந்தார்.

    இந்த ஊழலில் அவரது மருமகன் நீரவ் மோடியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தஞ்சம்

    போலி ஆவணங்கள் மூலம் ரெசிடென்ஸி கார்டு பெற்ற மெஹுல் சோக்ஸி

    தப்பியோடிய தொழிலதிபர் ஆண்ட்வெர்ப் நாட்டில் 'ரெசிடென்ஸி கார்டு' பெற்று வசித்து வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

    இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெல்ஜியத்தில் வதிவிடத்தைப் பெறுவதற்காக சோக்ஸி தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களைக் கொடுத்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    "சோக்ஸி பெல்ஜிய அதிகாரிகளிடம் தவறான அறிவிப்புகளையும் போலி ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். மேலும் தனது விண்ணப்பச் செயல்பாட்டில் தனது தேசியத்தை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் தற்போதைய குடியுரிமையின் விவரங்களை வெளியிடத் தவறிவிட்டார்" என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

    மறுபுறம், நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    சிபிஐ
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கைது

    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன? டெலிகிராம்
    விடுதலையாவரா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு கொலை
    பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது பெங்களூர்

    சிபிஐ

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம்
    யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை வங்கிக் கணக்கு
    நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை  நீட் தேர்வு
    NEET விவகாரத்தை அடுத்து 2024 UGC-NET தேர்வு ரத்து: மத்திய அரசு அதிரடி  யுஜிசி

    அமலாக்க இயக்குநரகம்

    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜெட் விமானம், சாலை பயணம்: ED கைதிலிருந்து ஜார்கண்ட் முதல்வர் தப்பியது எப்படி? ஜார்கண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025