Page Loader
பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் 

பச்சமலையில் பிறந்த பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் சேர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் 

எழுதியவர் Sindhuja SM
Jul 09, 2024
01:07 pm

செய்தி முன்னோட்டம்

பச்சமலை மலையில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி திருச்சி) இடம் பிடித்து, வரலாறு படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பழங்குடியின மாணவி என்ஐடி திருச்சியில் இடம் பிடித்திருப்பது 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். 18 வயதான ரோகிணி, கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) 73.8 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது சாதனை அப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.

திருச்சி 

பழங்குடியின மாணவியின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 

"நான் பழங்குடியினர் அரசுப் பள்ளியில் படித்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவி. ஜேஇஇ தேர்வில் பங்கேற்று 73.8 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். திருச்சி என்ஐடியில் இடம் பெற்று கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்திருக்கிறேன். எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி கூறி கொள்கிறேன். எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் தான் நான் சிறப்பாக செயல்பட்டேன்." என்று ANI செய்தி நிறுவனத்திடம் ரோஹிணி கூறியுள்ளார். ரோஹிணியின் பெற்றோர் கட்டிடத் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக கேரளாவுக்கு குடிபெயர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.