NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை

    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 11, 2023
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் இந்திய நிறுவனமான வேதாந்தா இணைந்து புதிய செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு வந்தன.

    19.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் தாங்கள் உருவாக்கவிருக்கும் செமிகண்டக்டர் தொழில்சாலையில் முதலீடு செய்யவிருப்பதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தன.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    ஆனால், கடந்த மே மாதம் திடீரென வேதாந்தா நிறுவத்துடன் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கும் கூட்டு முயற்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது ஃபாக்ஸ்கான்.

    உலகளவில் இந்தியாவை செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் முக்கியமான சந்தையாக மாற்ற முயற்சிக்கும் பிரதமரின் திட்டத்திற்கு இந்த பிரிவு-முடிவு பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியா

    மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு: 

    இதனைத் தொடர்ந்து, ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தாவின் இந்த பிரிவு, இந்தியாவிற்கு பின்னடைவு இல்லையா என்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

    "வேதாந்தாவுடனான கூட்டு முயற்சியில் இருந்து பிரியும் ஃபாக்ஸ்கானின் முடிவு, இந்தியாவின் செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது இந்தியாவிற்கு எந்த வகையிலும் பின்னடைவும் இல்லை" என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.

    மேலும், "இரு தனியார் நிறுவனங்களின் தனிப்பட்ட முடிவு மட்டுமே. அந்த நிறுவனங்களும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் முன்னனுபவம் இல்லாதவை. கடந்த 18 மாதங்களில் செமிகண்டக்டர் தயாரிக்கும் இலக்கில் வேகமாக முன்னேறியிருக்கிறது இந்தியா. இது தொடக்கம் மட்டுமே" எனவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் ட்விட்டர் பதிவு:

    ➡️This decision of Foxconn to withdraw from its JV wth Vedanta has no impact on India's #Semiconductor Fab goals. None.

    ➡️Both Foxconn n Vedanta have significant investments in India and are valued investors who are creating jobs n growth.

    ➡️It was well known that both… https://t.co/0DQrwXeCIr

    — Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) July 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை கேரளா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 5 தங்கம் வெள்ளி விலை
    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன் கால்பந்து
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா சீனா

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 22 தங்கம் வெள்ளி விலை
    புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம் அமெரிக்கா
    செயற்கைக்கோள் வழி இணையச்சேவை.. எலான் மஸ்க்கை எதிர்க்கும் முகேஷ் அம்பானி, ஏன்? எலான் மஸ்க்
    இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் அமெரிக்கா

    மத்திய அரசு

    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்! இந்தியா
    விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025