Page Loader
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா உடலநலக் குறைவால் காலமானார்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மரணம்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா உடலநலக் குறைவால் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2025
11:26 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நவீன் சாவ்லா, சனிக்கிழமையன்று தனது 79வது வயதில் காலமானார். அவரது மறைவுச் செய்தியை மற்றொரு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரைஷி மற்றும் ஒரு தேர்தல் ஆணையச் செயலர் உறுதிப்படுத்தினர். பத்து நாட்களுக்கு முன்பு நவீன் சாவ்லாவை சந்தித்தபோது, அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்ய தயாராகி வருவதாக, நவீன் சாவ்லா தன்னிடம் கூறியதாக குரைஷி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், "அவர் இன்று காலை காலமானார்." என்று குரைஷி கூறினார். சாவ்லா அவர்களின் கடைசி சந்திப்பின் போது மகிழ்ச்சியுடன் தோன்றினார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர்

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான நவீன் சாவ்லா, தேர்தல் அதிகாரிகளில் ஒருவராக 2005 முதல் 2009 வரை பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 2009 இல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஜூலை 2010 வரை அந்தப் பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில், இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடுவதில் முக்கியப் பங்காற்றினார். குரைஷி தனது இரங்கலைத் தெரிவித்து, எக்ஸ் தளத்தில், "இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவின் மறைவு குறித்து அறிந்து வருத்தமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என மேலும் தெரிவித்துள்ளார்.