NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?
    தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர்

    மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த வருடத்தின் முதல் கூட்டத்தை தன் உரையுடன் தொடங்கி வைத்தார்.

    "தமிழக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்" என்று தமிழில் கூறிய ஆளுநர், தன் உரையை ஆரம்பித்தார்.

    இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ சிபிஎம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த உரையில், "மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும். இதற்காக 500 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்" என்று ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

    ஆளுநர்

    சட்டசபையில் என்ன சர்ச்சை?

    தமிழக அரசு வடிவமைத்து கொடுத்த உரையை மாற்றி படித்ததாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆளுநர் உரையை வாசிக்கும் போது, தமிழ்நாடு, திராவிடம், அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே ஆளுநர் தவிர்த்தாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆளுநர் உரையை ஆங்கிலத்தில் படித்து முடித்ததும் அதே உரையைத் தமிழில் பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

    இதனையடுத்து, பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையில், முதல்வர் தன் உரையை முடிக்கும் முன்பே ஆளுநர் பாதியில் வெளியேறினார்.

    அதன்பின், "உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று சட்டப்பேரவையில் ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா

    தமிழ்நாடு

    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025