NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை அயனாவரத்தில் காவல்துறையினர் கடந்த 20ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதிகாலை 4.30மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் வந்துள்ளனர்.

    அவர்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருக்கையில், அவர்கள் வண்டியில் வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

    இதில் சங்கருக்கு தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நடத்திய விசாரணையில் அந்த 3பேர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடிகள் பெண்டு சூர்யா, கெளதம், சிவா என்பது தெரியவந்துள்ளது.

    கெளதம், சிவா ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பெண்டு சூர்யா அவரது அக்கா வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    குவியும் பாராட்டுக்கள்

    தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய பெண் உதவி ஆய்வாளர் மீனா

    அதன்பேரில், அயனாவரம் பெண்காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் தலைமைக்காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அங்குசென்று சூர்யாவை கைது செய்துள்ளனர்.

    வரும்வழியில் சூர்யா சிறுநீர் கழிக்கவேண்டும் என்று கூறியதால் வண்டியை நிறுத்தியுள்ளார்கள்.

    இதனையடுத்து சூர்யா தப்பியோட, அவரை விரட்டிக்கொண்டு சரவணன், அமானுதீன், திருநாவுக்கரசு ஆகியோர் சென்றுள்ளனர்.

    அப்போது சூர்யா அங்கிருந்த கரும்புஜூஸ் கடையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை வெட்டியுள்ளார்.

    இதில் அமானுதீன், ரவணன் பலத்தகாயம் அடைந்தனர்.

    இதனால் தற்காப்புக்காக உதவிஆய்வாளர் மீனா சூர்யாவை முழங்காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளார்.

    தற்போது சூர்யா மற்றும் காயமடைந்த இருகாவலர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

    துப்பாக்கிசூடு நடத்தி ரவுடியை பிடித்த மீனாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    சென்னை

    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சமூக வலைத்தளம்
    சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தலைவர்கள் சிலை அமைப்பு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு கோவை
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் உலக செய்திகள்

    தமிழ்நாடு

    ராணுவ வீரரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர்: இழப்பீடு கோரும் முன்னாள் வீரர்கள் திமுக
    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் மாவட்ட செய்திகள்
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் சென்னை

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025