NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    11:10 am
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

    சென்னையில் காவல்துறையினர் புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தினமும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வோர், அதிவேக பயணம் செய்வோருக்கு இவர்கள் அபராதம் விதித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி அயனாவரம் பழைய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சங்கர்(49) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று(பிப்.,19) வழக்கம்போல் அப்பகுதியில் சக காவலாளர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    2/2

    இரும்பு ராடால் தாக்கப்பட்ட உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதி

    இதனையடுத்து அவர்கள் தங்கள் வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சங்கரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் சங்கர் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டதோடு, காது மற்றும் முகத்திலும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சங்கரை சக காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற அந்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தீவிரமாக தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை
    தமிழ்நாடு

    சென்னை

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் மதுரை
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் தமிழ்நாடு
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி தமிழ்நாடு

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா? உடல் நலம்
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023