Page Loader
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 09, 2024
07:17 am

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த ஒரு இளம் ஆண் நோயாளியின் சமீபத்திய பயண வரலாறு, தற்போது Mpox பரவலை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டிற்கு அவர் சென்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நோயாளி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்த நோயாளிக்கு குரங்கம்மை இருப்பதை உறுதி செய்வதற்காக அவரது மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கவலை வேண்டாம்

தேவையற்ற கவலை வேண்டாம் என சுகாதாரத்துறை அறிக்கை

நாட்டில் முதல் குரங்கம்மை பாதிப்பை கண்டறிந்துள்ள நிலையில், வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயத்தையும் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் நாடு முழுமையாக தயாராக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் உறுதியளித்தது. மேலும், இதுகுறித்து எந்தவொரு தேவையற்ற கவலையையும் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. குரங்கம்மை நோய்த்தொற்றுகள் பொதுவாக 2-4 வாரங்களுக்கு இடையில் நீடிக்கும் என்றும் நோயாளிகள் பொதுவாக ஆதரவான நிர்வாகத்துடன் குணமடைவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இந்தப் பரவலுக்கு பாதிக்கப்பட்ட நபருடன் நீண்டகால நெருங்கிய தொடர்பு தேவைப்படுகிறது மற்றும் பொதுவாக பாலியல் வழி, உடல் / புண் திரவத்துடன் நேரடி தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை மூலம் பரவுகிறது." என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.