NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி
    ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி

    ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி

    எழுதியவர் Nivetha P
    Oct 25, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    இதன் மூலம் இவர் இந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்னும் சாதனையை படைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    விமானப்படையில் தொடர்ச்சியாக கடுமையாக பணியாற்றி இவர் இந்த பதவி உயர்வினை பெற்றுள்ளார்.

    இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இவரது கணவரான கே.பி.நாயரும் ஏர் மார்ஷல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

    இதன் மூலம் இவர்கள் ஏர் மார்ஷல் பதவியினை வகித்த தம்பதி என்னும் பெருமையையும் பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    பதவி 

    விமான படையின் விசிஷ்ட சேவா பதக்கம் வென்ற சாதனா சக்சேனா

    ராணுவ மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர் கடந்த 1985ம் ஆண்டு இந்திய விமான படையில் சேர்ந்துள்ளார்.

    குடும்ப மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

    ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா விமான படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்பாக சேவையாற்றி பெற்றுள்ளார்.

    மேலும், மேற்கு விமான பயிற்சி படையில் முதன்மை மருத்துவத்தின் முதல் பெண் அதிகாரி என்னும் பெருமையும் இவருக்கு உள்ளது.

    இதனிடையே, இவருக்கு ஏர் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது இந்திய ராணுவத்தில் பணிபுரியும் மற்ற பெண் அதிகாரிகளுக்கு ஓர் உத்வேகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானப்படை

    சமீபத்திய

    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா

    இந்தியா

    அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு வணிகம்
     மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்
    அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி? மத்திய அரசு
    உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி செஸ் போட்டி

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025