NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்
    சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு

    சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கி மோசடி தொடர்பான அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலம் சபோரா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) போலி கிளை கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலையில்லாத தனிநபர்களையும் உள்ளூர் கிராம மக்களையும் ஏமாற்றுவதற்காக, வங்கிக்கு தேவையான பொருட்கள், கவுன்ட்டர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் முழுமையான போலிக் கிளையை குற்றவாளிகள் அமைத்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் 27 அன்று, டாப்ராவில் சட்டபூர்வமாக இயங்கி வரும் ஒரு எஸ்பிஐ கிளையின் மேலாளர் இதையறிந்து சந்தேகமடைந்ததை அடுத்து, காவல்துறை மற்றும் எஸ்பிஐ அதிகாரிகள் தலையிட்டதையடுத்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

    அதிர்ஷ்டவசமாக இந்த போலி வங்கி வெறும் 10 நாட்கள் மட்டுமே செயல்பட்டதால், குறைவான மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலை

    பணம் வாங்கிக் கொண்டு வேலை கொடுத்த மோசடி பேர்வழிகள்

    மோசடியில் ஈடுபட்டவர்கள் ஆறு நபர்களை தங்கள் போலி வங்கி கிளையில் வேலைக்கு சேர்த்தனர். அவர்களுக்கு மேலாளர்கள், காசாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் போன்ற பாத்திரங்களை வழங்கினர்.

    எஸ்பிஐ அரசு வங்கி என்பதால், தங்கள் நியமனங்களுக்கு ₹2 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை செலுத்தி இந்த போலியான வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

    இந்த கிளை கிராம மக்களையும் குறிவைத்தது. அவர்கள் அறியாமல் போலி வங்கியில் கணக்குகளைத் தொடங்கி பரிவர்த்தனைகளை நடத்தத் தொடங்கினர்.

    இதற்கிடையே, உள்ளூர் கிராமவாசியான அஜய் குமார் அகர்வால், டாப்ரா கிளை மேலாளரிடம் முறைகேடுகளைப் புகாரளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை அம்பலமானது. இதையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்பிஐ
    சத்தீஸ்கர்
    இந்தியா
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    எஸ்பிஐ

    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் ரிலையன்ஸ்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்க கால அவகாசம் கோரியது எஸ்பிஐ  உச்ச நீதிமன்றம்
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    இந்தியா

    ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு ஜப்பான்
    ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு மத்திய அரசு
    இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ்; விலை எவ்ளோ தெரியுமா? ரோல்ஸ் ராய்ஸ்
    Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள் குரங்கம்மை

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025