NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
    இந்தியா

    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    April 08, 2023 | 12:52 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்ட்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி

    தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகியிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில் குமார் மக்கள் நீதி மய்யம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல அமைப்பாளராக உள்ளார். இவரது இன்ஸ்ட்டாகிராம் கணக்கிற்கு தமிழக நிதியமைச்சர் பெயரில் ப்ரொபைலில் படத்தோடு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். செந்தில் குமாரியிடம் மிக சகஜமாக நன்றாக உள்ளீர்களா? என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதன் பின்னர், அவசர தேவைக்காக ரூ.13,500 பணம் தேவைப்படுகிறது, உடனடியாக அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.

    பொது மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

    தமிழக நிதியமைச்சர் நம்மிடம் பணம் கேட்கிறாரே என்று அதிர்ந்த செந்தில் குமார், பின்னர் சுதாரித்து கொண்டு, இது போலி கணக்கு என்று அறிந்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் இது குறித்து செந்தில் குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மாவட்ட ஆட்சியர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பெயரில் இது போன்று போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பணம் கேட்ட சம்பவங்கள் முன்னரே பல முறை அரங்கேறியுள்ளது. எனவே பொது மக்கள் இது குறித்த விழிப்புணர்வுடன், எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இன்ஸ்டாகிராம்
    நிதியமைச்சர்
    போலி தகவல்
    தமிழ்நாடு

    இன்ஸ்டாகிராம்

    இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல் விஜய்
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு மாவட்ட செய்திகள்
    மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் - கட்டண விபரம் என்ன தெரியுமா? மெட்டா

    நிதியமைச்சர்

    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு
    அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில் நிர்மலா சீதாராமன்
    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத் நிர்மலா சீதாராமன்

    போலி தகவல்

    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு

    தமிழ்நாடு

    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல் ராமநாதபுரம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பிரதமர் மோடி
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோவை
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023