NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  
    10 ஆம் வகுப்பு CBSE அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து டார்வின் கோட்பாடு மற்றும் தனிம அட்டவணை நீக்கப்பட்டது

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது  

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2023
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.

    இந்த தலைப்புகளை எல்லாம் NCERT பள்ளி பாட புத்தகங்களில் இருந்து நீக்கி உள்ளது.

    11-18 வயதுடைய சுமார் 134 மில்லியன் மாணவர்களை பாதிக்கும் இந்த மாற்றங்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    15-16 வயதுக்குட்பட்ட மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியை நீக்கியதால் ஏற்கனவே பெரும் சர்ச்சை கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் போடப்பட்டன.

    ஆனால், புதிதாக வெளியிட்டிருக்கும் பாடப்புத்தகங்களில், தனிம அட்டவணை, மாசுபாடுகள் மற்றும் பருவநிலை தொடர்பான தலைப்புகள் உட்பட பல்வேறு தலைப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) நீக்கியுள்ளது.

    details

    NCERT இந்த மாற்றங்களுக்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை

    இதனால், மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயிரியல், வேதியியல், புவியியல், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    "பரிணாம வளர்ச்சியை பற்றி பேசாமல் உயிரியலைக் கற்பிக்க முயற்சிக்கும் எவராலும் இன்றைய காலகட்ட உயிரியலைக் கற்பிக்க முடியாது." என்று கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அறிவியல்-கல்வி ஆராய்ச்சியாளர் ஜோனதன் ஆஸ்போர்ன் ஒரு ஆய்வு கட்டுரையில் கூறி இருக்கிறார்.

    4,500 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் தொடர்பாளர்கள் பரிணாம வளர்ச்சியை மீண்டும் புத்தகங்களில் சேர்க்க கோரி, கொல்கத்தாவில் உள்ள பிரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டி என்ற பிரச்சாரக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

    ஆனால், NCERT இந்த மாற்றங்களுக்கான காரணத்தை இன்னும் விளக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை டெல்லி
    இந்தியாவில் BGMI சர்வர்கள் செயல்பாட்டிற்கு வந்தன.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது விளையாட்டு நிறுவனம்! கேம்ஸ்
    'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர் இஸ்ரோ
    சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்! தடகள போட்டி

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025