LOADING...
அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்
இவர்கள் இருவரும் நேற்று பட்டப்பகலில் கொல்லப்பட்டனர்

அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்

எழுதியவர் Sindhuja SM
Jul 12, 2023
10:20 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூரில் உள்ள வளர்ந்து வரும் ஒரு சிறு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) அலுவலகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் அமிர்தஹள்ளியில் உள்ள பம்பை எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற சிறு தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இணைய சேவைகளை வழங்குவது இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஃபனிந்திர சுப்ரமணி என்பவரும், தலைமை நிர்வாக அதிகாரியாக வினுகுமார் என்பவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும், பெலிக்ஸ் என்ற சந்தேக நபரால் நேற்று பட்டப்பகலில் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுஜா

3 பேர் சேர்ந்து திட்டமிட்டு செய்த கொலை 

இதே நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பெலிக்ஸ், தனது தொழில் நடைமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று மாலை 4 மணியளவில், திடீரென்று ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்திற்குள் ஒரு வாளுடன் நுழைந்த பெலிக்ஸ், ஃபனிந்திர சுப்ரமணி மற்றும் வினுகுமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து பேசிய வடகிழக்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மி பிரசாத், குற்றம் சாட்டப்பட்டவருடன் மேலும் இரண்டு பேர் இருந்தனர் என்றும், மூவரும் தப்பியோடி இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். "குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். மேலும் அவரது கூட்டாளிகள் இருவரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.