NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து! 
    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து! 
    இந்தியா

    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    April 26, 2023 | 10:13 am 1 நிமிட வாசிப்பு
    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து! 
    மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

    சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை நெறிமுறைப்படுத்துவதற்கான 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை' ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு கொண்டு வந்தது. சமூக வலைத்தள சேவை நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் தகவல்களை ஆய்வு செய்து, தேவையான நேரங்களில் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்ற திருத்தங்களுடன் கூடிய விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவைப் பின்பற்றியிருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். மேலும், டிஜிட்டல் இந்தியா சட்டம் குறித்த தன்னுடைய கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

    டிஜிட்டல் இந்தியா சட்டம்: 

    நாளுக்கு நாள் மாறி வரும் டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்களை உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவிலும் இணையத்தை பாதுகாப்பான வகையில் மாற்றவும், இந்தியா விரைவாக 1 ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடையவும் உலக தரத்திலான இணையச் சட்டங்கள் தேவை, எனக் கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். இதற்காகவே டிஜிட்டல் இந்தியா சட்டம் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் இந்த சட்டமானது சந்தையின் தேவைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் வகையில் இருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சட்டமானது பிரதமர் மோடியின் டிஜிட்டல் 'இந்தியா இலக்குகள் 2026'-ஐ அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமூக வலைத்தளம்
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலகம்

    சமூக வலைத்தளம்

    பல சாதனங்களில் ஒரே கணக்கு.. புதிய வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்!  வாட்ஸ்அப்
    யூடியூப் பரிந்துரைகள் குறித்த வழக்கு.. AI சேவையையும் பாதிக்குமா?  அமெரிக்கா
    கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்!  ட்விட்டர்
    நீல நிற செக் மார்க்.. இன்றே கடைசி நாள்.. ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு!  ட்விட்டர்

    இந்தியா

    நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!  தனுஷ்
    இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா' உத்தரகாண்ட்
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது ஆம் ஆத்மி
    உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா உலக கோப்பை

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 26-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ஒன்பிளஸ் பேடின் விலை என்ன.. அறிவித்தது ஒன்பிள்ஸ்!  கேட்ஜட்ஸ்
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    8 வருடம் பணியாற்றிய மெட்டா ஊழியர் பணிநீக்கம் - உருக்கமான பதிவு! மெட்டா

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 25-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    புதிய வசதிகளை அறிமுகம் செய்யவிருக்கும் வாட்ஸ்அப்.. என்னென்ன வசதிகள்?  வாட்ஸ்அப்
    அட்சய திருதியை முடிந்தும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் வணிக செய்தி
    இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே!  கூகுள்

    உலகம்

    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி பாகிஸ்தான்
    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023