NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்
    சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்

    சாதி பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டேன் - ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்

    எழுதியவர் Nivetha P
    Jun 08, 2023
    05:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ஆட்சியராக இருந்து கொரோனா மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அதிவேகமாக செயல்பட்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் ககன்தீப் சிங் பேடி.

    இவர் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இவர் தன்னை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தினை தூண்டும் அளவிற்கு துன்புறுத்தியதாக தற்போதைய ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர்.மனீஷ் நரனவாரே ஐஏஎஸ் அதிகாரி தலைமை செயலாளருக்கு 2 பக்கஅளவில் புகார் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

    அதில் அவர், "ஜூன்.14.2021 முதல் ஜூன்.12.,2022வரை சென்னை துணைச்சுகாதார ஆணையராக இருக்கையில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை இக்கடிதம் மூலம் நான் பகிர்ந்துக்கொள்கிறேன்.

    நான் குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவன் என்பதை தெரிந்துக்கொண்ட அவர், எனக்கு பணிநிமித்தமாக பல தொல்லைகளை கொடுத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடவடிக்கை 

    தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 

    தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது,"ஒரு கையெழுத்துக்காக மணிக்கணக்கில் என்னை காக்க வைப்பார்.

    ஒரு வழியாக அவரை சந்தித்தால், தற்போது லேட் ஆகிவிட்டது, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுவார்.

    இந்தூருக்கு ஒருமுறை அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுதும், புத்த மதத்தினை பின்பற்றும் நீ எதற்காக உஜ்ஜயின் கோயிலுக்கு செல்கிறாய்? என்று கேள்வியெழுப்பி என்னை மனமுடைய செய்துள்ளார்.

    இரவு 8.30மணிக்கு சுடுகாடு பகுதியில் ஏதேனும் தவறு நடக்கிறதா என்று ஆய்வு செய்யும்படி கூறி அனுப்புவார்.

    எனக்கும், எனது மூத்த அதிகாரிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணமாய் இருந்துள்ளார்.

    இவர் செய்த கொடுமைகள் அனைத்தும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறேன்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஈரோடு
    கொரோனா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்  கோவை
    லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை லைகா
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! செயற்கை நுண்ணறிவு
    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை இந்தியா

    ஈரோடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் தேர்தல்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 9,355 கொரோனா பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு  இந்தியா
    தமிழகத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து ஆலோசனை கூட்டம்  சென்னை
    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 4,282 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025