NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

    முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2024
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் அரசு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    மாநில காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி பிஆர்எஸ் அரசு, முக்கிய பிரபலங்களை ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பிஆர்எஸ் இன்னும் பதிலளிக்கவில்லை.

    இது தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், அமெரிக்காவில் உள்ள மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பிரபாகர் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா 

    முதல்வர் ரேவந்த் ரெட்டியின் வீட்டுக்கு அருகே அலுவலகம் அமைத்து ஒட்டுக்கேட்ட அதிகாரிகள் 

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஜங்க ராவ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தண்ணா ஆகிய இரண்டு மூத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக கண்காணித்ததாகவும் ஆதாரங்களை அழித்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    அப்போதைய பிஆர்எஸ் அரசாங்கத்தின் கீழ் மாநில புலனாய்வுப் பணியகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த ரவி பால், முதல்வர் ரேவந்த் ரெட்டியின் உரையாடல்களைக் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு அருகில் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் கருவிகளை அமைத்ததாக கூறப்படுகிறது.

    அப்படி ஒட்டு கேட்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இஸ்ரேலில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    ரவி பால், ரேவந்த் ரெட்டியின் வீட்டிற்கு அருகில் அலுவலகம் அமைத்து, அந்த சாதனத்தை நிறுவியதாக பேசப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கானா

    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை மேற்கு வங்காளம்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து  குற்றவியல் நிகழ்வு

    காங்கிரஸ்

    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் உத்தரப்பிரதேசம்
    "எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை": கார்த்தி சிதம்பரம் கார்த்தி
    2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து முக்கிய தலைவரை விலக்கியது காங்கிரஸ்  தேர்தல்
    ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல் ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025