NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 
    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 

    எழுதியவர் Nivetha P
    Jun 26, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.

    இப்பட்டியலினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசுகையில், "1,87,847 பேருக்கு இந்தாண்டு மதிப்பெண் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி சென்ற ஆண்டினை விட இந்தாண்டு 18 ஆயிரம் மாணவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.

    7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் 31,445 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இதில் 15,136மாணவர்கள், 13,284மாணவிகள் மற்றும் இதர வகுப்பினை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு கல்லூரிக்கட்டணம், விடுதிக்கட்டணம் என எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கலந்தாய்விற்கான பட்டியலில் இவ்வருடம் அரசு பள்ளி மாணவர்கள் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மாணவர்கள் 

    200க்கு 200 மதிப்பெண்களை 102 மாணவர்கள் எடுத்துள்ளனர் 

    அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுள், சென்னை சைதாபேட்டையினை சேர்ந்த மகாலட்சுமி, 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடத்திலும், நாகப்பட்டின மாவட்டத்தினை சேர்ந்த நிவேதிதா என்பவர், இரண்டாம் இடமும், கோவை மாவட்டத்தினை சேர்ந்த சரவணகுமார் என்னும் மாணவர் மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளார்கள்.

    மேலும் 200க்கு 200 மதிப்பெண்களை 102 மாணவர்கள் எடுத்துள்ள நிலையில், அதில் 100 பேர் மாநில கல்வியினை(State Board) பயின்றவர்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தினை திருச்செந்தூரை சேர்ந்த மகாலட்சுமி பிடித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து, தர்மபுரியினை சேர்ந்த ஹரினிகா என்னும் மாணவி இரண்டாம் இடத்திலும், திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த ரோஷினி பானு என்பவர் 3ம் இடத்தினையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    பொறியியல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் சேலம்
    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ் தமிழ்நாடு

    பொறியியல்

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025