NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை
    4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் விசாரணை

    4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 10, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    அதனை தொடர்ந்து, கடந்த 7-ஆம் தேதி முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். சென்னையிலுள்ள உள்ள சாஸ்திரி பவனில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் கேட்பதற்க்கென, 400 கேள்விகள் தயார் செய்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த கேள்விகள் அனைத்திற்குமே எழுத்துபூர்வமாக செந்தில் பாலாஜியிடம் பதில் பெறப்பட்டு வருகிறது.

    card 2

    சுழற்சி முறையில் 3 அதிகாரிகள் விசாரணை 

    கடந்த திங்கட்கிழமை மாலை தொடங்கிய விசாரணை, இன்று வரை தொடர்கிறது. சுழற்சி முறையில், 3 அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் விசாரித்து வருகின்றனர்.

    செந்தில் பாலாஜியின், வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட் துணையுடன் விசாரணை நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், இந்த விசாரணை அனைத்துமே வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    400 கேள்விகளில் இது வரை 250 கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதிலளித்து உள்ளார். மருத்துவர்கள் துணையுடன், அவர்கள் அறிவுறுத்தல்படி, உணவும், மருந்தும், ஓய்வெடுக்க நேரமும் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, செந்தில் பாலாஜியின் தம்பியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி, அசோக்குமாரின் மனைவி நிர்மலாவிற்கு, ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025