NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
    பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
    இந்தியா

    பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி

    எழுதியவர் Sindhuja SM
    February 19, 2023 | 11:45 am 1 நிமிட வாசிப்பு
    பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளிர்ச்சியான வீடு: இரு பெண்களின் புதிய முயற்சி
    16,000 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடு

    இந்தியா ஆண்டுதோறும் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறது. கொரோனா ஊரடங்கினால் பிளாஸ்டிக் சந்தை மிகவும் அதிகரித்துள்ளதே தவிர, அது குறைந்துவிடவில்லை. சேகரிக்கப்படாத பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலானவை குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு, நீர்நிலைகளை அடைத்து, தெருக்களை மாசுபடுத்துகின்றன. ஆனால் ஔரங்காபாத்தை சேர்ந்த இருவர், அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்தும் ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளனர். நண்பர்களான நமிதா கபாலே மற்றும் கல்யாணி பார்ம்பே ஆகியோர் 16,000 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டைக் கட்டியுள்ளனர். தௌலதாபாத் அருகே உள்ள சம்பாஜி நகரில் கட்டப்பட்ட இந்த வீடு, கிட்டத்தட்ட 4,000 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.

    எப்படி இப்படி ஒரு ஐடியா அவர்களுக்கு வந்தது?

    இவர்கள் இருவரும் மாட்டு சாணம், மண், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் 12-13 டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டைக் கட்டியுள்ளனர். 2020ஆம் ஆண்டில், நமிதாவும் கல்யாணியும் அவுரங்காபாத்தில் உள்ள அரசு கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரியில் நுண்கலைப் படிப்பை முடித்தனர். 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 ஊரடங்கின் போது, ​​அசாமின் பமோஹி கிராமத்தில் உள்ள அக்ஷர் பள்ளி, மாணவர்களுக்கான இருக்கைகளை அமைக்க காலி பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி இருந்தது. அதை கண்டபோது, ​​இந்த நண்பர்களுக்கு அப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    'வேலை செய்வதற்கான சிறந்த முறை' எது என்பதை சொல்கிறார் கீதா கோபிநாத் வைரல் செய்தி
    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை கோவை
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா
    Bing சாட்போட்டை இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்! தொழில்நுட்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023